நாகதம்பிரான் ஆலயத்திற்கான அடிக்கல்நாட்டுவிழா

சித்தாண்டி -மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள பரிவாரதெய்வங்களுள் ஒன்றான நாகதம்பிரான் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா ஆலயத் தலைவர் ஆ.தேவராஜா அவர்களின் தலைமையில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆலய நித்தியகுரு சத்தியநாதன் ஐயா, விஸ்வகுல விழாக்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

திருக்கும்பம் சொரிதல் நிகழ்வு

திருக்கேதார கெளரிவிரதத்தின் இறுதிநாளான இன்று (04.11.2013) திருக்கேதார கெளரி விரத திருக்கும்பம் சொரிதல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலய திருக்கும்பம் சொரிதல் நிகழ்வானது ஆலயத்திலிருந்து சுந்தரர் வீதி, மணிவாசகர் வீதி, பிரதான வீதி, உதயன்மூலை வீதி ஆகியவற்றுக்கூடாக  திருக்கும்பம் எடுத்து வரப்பட்டு உதயன்மூலை தீர்த்தக்குளத்தில் சொரியப்பட்டது.

பத்திரகாளி அம்மன் ஆலயயத்தின் திருக்காப்பு வழங்கும் நிகழ்வு

திருக்கோதார கெளரிவிரத நிறைவு நிகழ்வுகளை முன்னிட்டு திருக்காப்பு வழங்கும் நிகழ்வு இன்று (03.11.2013) சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் காலை 9.00 மணி முதல் இடம்பெறற்றுக் கொண்டிருக்கின்றது.