திருக்கும்பம் சொரிதல் நிகழ்வு
திருக்கேதார
கெளரிவிரதத்தின் இறுதிநாளான இன்று (04.11.2013) திருக்கேதார கெளரி விரத
திருக்கும்பம் சொரிதல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில்
சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலய திருக்கும்பம் சொரிதல்
நிகழ்வானது ஆலயத்திலிருந்து சுந்தரர் வீதி, மணிவாசகர் வீதி, பிரதான வீதி,
உதயன்மூலை வீதி ஆகியவற்றுக்கூடாக திருக்கும்பம் எடுத்து வரப்பட்டு
உதயன்மூலை தீர்த்தக்குளத்தில் சொரியப்பட்டது.