மணிமண்டப வேலைகள் ஆரம்பம்
திருக்கும்பம் சொரிதல் நிகழ்வு
திருக்கேதார
கெளரிவிரதத்தின் இறுதிநாளான இன்று (04.11.2013) திருக்கேதார கெளரி விரத
திருக்கும்பம் சொரிதல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில்
சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலய திருக்கும்பம் சொரிதல்
நிகழ்வானது ஆலயத்திலிருந்து சுந்தரர் வீதி, மணிவாசகர் வீதி, பிரதான வீதி,
உதயன்மூலை வீதி ஆகியவற்றுக்கூடாக திருக்கும்பம் எடுத்து வரப்பட்டு
உதயன்மூலை தீர்த்தக்குளத்தில் சொரியப்பட்டது.
பத்திரகாளி அம்மன் ஆலய பாற்குடப் பவனி - 2013
சித்தாண்டி
- மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் கேதார கெளரி விரத நிகழ்வுகளை
முன்னிட்டு இன்று (29.10.2013) பாற்குடப் பவனி நகிழ்வு சிறப்பாக
நடைபெற்றது. ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வானது
சித்தாண்டி சித்திரவேலாயுதர் பெருமான் ஆலயத்தில் காலை 8.00 மணியளவில்
ஆரம்பித்து, பிரதான வீதியை அடைந்து அங்கிருந்து காளிகோவில் வீதியூடாக
ஆலயத்தை அடைந்தது.