இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கமைய சித்தாண்டி மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தினால் நடாத்தப்பட்டு வரும் காளிகா அறநெறி பாடசாலையினால் கடந்த 06.03.2016 அன்று திருவள்ளுவர் குரு பூசை தினம் அனுஸ்டிக்கபட்டது.
ஆலயத்தின் தலைவரும் காளிகா அறநெறி பாடசாiலையின் பொறுப்பாசிரியருமான ஆறுமுகம் தேவராசா தலைமையில் இடம்பெற்ற பூசை நிகழ்வில் ஆலயத்தின் நித்திய குரு து. சத்தியநாதன் ஐயா மற்றும் ஆலய பொருளாளர் ம.பாஸ்கரன் மாவடிவேம்பு 2 கிராம சேவகர் குணசீலன் மற்றும் R.D.B. வங்கியின் பிரதி முகாமையாளரும் ஆலயத்தின் அறப்பணி நிதியத்தின் நிதியப் பொறுப்பாளருமான பிரமானந்தராஜா அறநெறி பாடசாலை ஆசிரியைகளான விக்னேஸ்வரி மற்றும் ரம்யா உட்பட மாணவ மாணவிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.
0 comments:
Post a Comment