சித்தாண்டி
- மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் கேதார கெளரி விரத நிகழ்வுகளை
முன்னிட்டு இன்று (29.10.2013) பாற்குடப் பவனி நகிழ்வு சிறப்பாக
நடைபெற்றது. ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வானது
சித்தாண்டி சித்திரவேலாயுதர் பெருமான் ஆலயத்தில் காலை 8.00 மணியளவில்
ஆரம்பித்து, பிரதான வீதியை அடைந்து அங்கிருந்து காளிகோவில் வீதியூடாக
ஆலயத்தை அடைந்தது.
ஆலயத்தில்
புதிதாக அமைக்கப்பட்ட திருக்கேதார கெளரி அம்பாள் ஆலயத்தில் பாலாபிசேம்
செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பெருமளவிலான பக்கதர்கள் கலந்துகொண்டு
சிறப்பித்திருந்தார்கள்.
(படங்கள்: சிவபாலன், நல்லதம்பி, ஆலய பரிபாலன சபையினர்)
0 comments:
Post a Comment